Contact us

முகிழ்க்கும் மனங்கள்

Language: Tamil

Instructors: Nandhini Sugumaran

Why this course?

Description

 

 

                                   முன்னுரை

 

முகிழ் என்பது மலரின் ஒரு பருவநிலை‌. மொட்டானது மெல்ல விரிந்து மணம் பெறத் துவங்குவதே முகிழ். மலரின் அடையாளமே, அதன் வாசம் தான்‌.‌ அதேபோல் மனிதர்களை அடையாளப்படுத்துவது, அவர்களின் குணநலன்களே!

 

கதை மாந்தர்கள் ஒவ்வொருவரின் குணமும், துவக்கத்தில் இருந்து இறுதி வரை எவ்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டு நிலைபெறுகிறது என்பதை விவரிப்பதே முகிழ்க்கும் மனங்களான இக்கதை.

 

எப்பொழுதும் ஒரு பெண்ணின் பக்கம் இருந்து அவளின் உணர்வுகளை எழுத்துகளாய் கொடுக்கும் நான், இதில் முதன்மை கதாபாத்திரமாய் திருநீலகண்டனைச் சித்திரித்து. அவனது உணர்வுகளையும் தேவைகளையும் கதையாய்ச் சொல்ல முயன்றிருக்கிறேன். 

 

இது காதல் கதையன்று, ஒரு வாழ்வியல்.‌ கற்பனைக் கதைக்களத்தில் உண்மை நிகழ்வுகளை புகுத்தி, கதையாய்த் தந்திருக்கிறேன். இதோ எனது எழுத்துகளின் முகிழ், தங்களின் வாசிப்பிற்காக.‌.

 

அன்புடன்

நந்தினி சுகுமாரன்.

 

Table of Contents

Reviews

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
eRead.Club 2024 Privacy policy Terms of use Contact us Refund policy